Saturday, September 11, 2010

சன்னல் வழியே

பார்த்துக்கொண்டே வந்தோம்

வழியெல்லாம் இயற்கையை

நான் ரசிக்க

அவன் கோயிலைத் தேடினான்

ஆளற்ற பெருவெளியில்

சிலையொன்று தென்பட்டது

வேல வில்லா அடையாளம் theriyavillai

கண்ணை மூடினான்

கன்னத்தில் போட்டுக்கொண்டான்

என்ன சிலை என்றேன்

முருகன் என்றான்

வில் மாதிரி தெரிந்ததே என்றேன்

aப்படின்ன ராமனா இருக்கும் என்றான்

வேடியப்பன் பற்றியெல்லாம் அவனுக்கு

தெரிந்திருக்க நியாயம் illai

என் சிரிப்பில் அவன் மதச்சாயம்

வெளுத்ததை அறிந்துகொண்டான்

எனக்கு எல்லாம் ஒன்றுதான் என்றான்

அந்தப் பக்கம் பார்த்தேன்

தேவாலயமும் mஅசூதியும் தெரிந்தன

அவனுக்குத் தெரிந்திருக்குமோ

தெரியவில்லை

பெரியார் சிலை வந்தது

இறங்கிக் கொண்டேன்

கையசைத்தேன் கவனிக்க வில்லை

அவன் கண்கள்

கோயிலைத் தேடி..

No comments:

Post a Comment