Saturday, November 16, 2013

முட்களின் தேசம்

அது ஒரு பூந்தோட்டம்!
அந்தத் தோட்டத்தை அவர்கள்தான்
அமைத்தார்கள்
இல்லறம் என்ற பெயரில்!

மகிழ்ச்சியை மகரந்தங்களாய் தூவி
மணம் பரப்பும் ரோஜாத் தோட்டம்!
மலர்களின் சிரிப்பில்
இலைகளின் செழிப்பில்
முட்கள் தெரியவில்லை!

அவ்வப்போது முட்கள் தம்
இருப்பைக் காட்டினாலும்
பொருட்படுத்தப்படவில்லை
மழலைகளின் தளிர்க்கைகள்
வலியைத் தடவிச் சரிசெய்தன!

இலைகள் உதிரத்தொடங்கிய
பொழுதொன்றில்
முட்கள் கண்களை உறுத்த
மலர்கள் எரிச்சலூட்டின!

அவர்கள் மலர்களைச் சிதைத்து
இதழிதழாய் உதிர்த்து
கைகளில் குருதி வழிய
முட்களைப் பறித்துச் சூடினர்
தலையில் சூடிய முள்
மனதுக்குள் பூதாகரமாய் வளர்ந்தடர
அழகிழந்தது தோட்டம்
முள்காடு என்ற பெயரில்!

உதிர்ந்த இதழ்களை
மலர்ப்படுக்கையாக எண்ணி
மகிழ்கின்றன மழலைகள்
வாடிய இதழ்களுக்கு
நிறமூட்டுவதாய்
ஒழுகும் குருதியில் அகமகிழ்நதன
முள்காட்டின் உணர்வின்றி!

முள்ளைச்சூடி முள்ளில் கீறி
முள்ளாகவே மாறும் பொழுதின் அண்மையில்
அவர்கள் மலர்த்தோட்டம் நினைவுவர
அலைந்து தேடினர்
தொலைத்தமைக்கான காரணங்களை
ஒருவர்மீ தொருவர் சுமத்தினர்
பழிகளைச் செதுக்கிச் சிலுவைகளாக்கிச்
சுமந்தலைந்தனர்
கண்ணை மறைத்தெழந்த முள்ளை
பறித்தெறியத் தெரியாமல்!

அந்த மலர்த்தோட்டத்தைச் சுமந்து
வளரிளங் கன்றுகள்
கனம் தாங்காமல்
கலங்குகின்றன!
மலர்கள் விரிந்த பரப்பெங்கும்
ஆட்சியைப் பரப்பியது முள்

தோட்டம் என்பது
முட்களின் தேசம் என்று
வாலிபக்கன்றுகளுக்கு உணர்த்தப்பட்டதில்
அவற்றின் பாதை
முட்களையே பூப்பிக்கக் கூடும்

வேர்கள் பறிக்கமுடியாத ஆழத்தில்
பின்னிப் பிணைந்திருக்க
முட்களின் வனாந்திரச் சிறையில்
பூக்களின் கனவுகளை உதிர்த்து
சபித்துக்கொண்டலைகின்றனர்
தமது தோட்டம் கன்றுகளுக்கும்
உரியது என்பதை மறந்து

Sunday, November 10, 2013

நுரைபொங்கப் பெருகியோடும்
வெள்ளச் சுழிப்பில் சிக்கி
சுழன்று அலைகின்றன வார்த்தைகள்
தப்பி மிதக்கின்ற இலைப்பரப்பில்
உயிர்பிழைத்து ஊர்கின்றது
கவிதை
கரைதேடி!

Monday, June 24, 2013

மரணமிலாக் கவிஞனுக்குப் பிறந்தநாள் சிறுகூடல் பட்டியின் பிள்ளைச் சிணுங்கல் கவிதையாய் ஊற்றெடுத்தது தமிழன்னையின் கால்நனைத்தது பாசம் பொங்க அள்ளியெடுத்தாள் அவன் கவிஞன் ஆனான் அரியாசனம கொடுத்தாள் கவியரசாய் முடிசூடினான் எழுதுகோல் செங்கோல் ஆனது கண்ணதாசனாய்ப் பெயர் சூடினான் திசை யாவும் அடிமையானது ஈன்ற பொழுதினும் பெரிதாய் உவந்தாள் தாயை வளர்த்தான் தானும் வளர்ந்தான் தனையாள யாருமின்றித தனியாட்சி செய்தான் அது தாசர்களின் காலம் பாரதிதாசன் சுப்புரத்தின தாசன் வாணிதாசன் கம்பதாசன் அந்த வரிசையில் கண்ணதாசனும் முன்சொன்னோர் போல இவன் பொய்யடிமை யல்ல்ன் மதுவுக்கும் சுகத்திற்கும் மெய்யான தாசன் அடிமைத் தளைகளைச் சிறகாய் விரித்தான் மயங்கவைக்கும் போதைகளில் மூழ்காமல் மிதந்தான் கவிதைவானில் பறந்தான் உயர்ந்தான் மதுக்கிண்ணத்தில் வழுக்கி விழுந்தான் காமக்குளத்தில் மூழ்கித் திளைத்தான் உணர்வுகள் விழித்தெழும் வேளைகளில் ஞானக் கரையில பாவம் கரைத்தான் வாழ்வதற்கு வழிகாட்டும் அவன்கவிதை கூடாத வாழ்க்கைக்குச் சான்றாகும் சுயசரிதை சேர்த்துவைக்க அவன் கற்கவில்லை வாட்டிவதைத்த நெருக்கடிகள் கொஞ்சமில்லை இன்பத்தில் நீராடினான் துன்பத்தில் போராடினான் மேகம் போலக் கவிதை பொழிந்து நிர்மலமாகும் அவன்வானம் தாகம் பெருகப் பருகித் திளைத்து மேலும் கேட்கும் சோலைவனம் திரையுலகில் ஒருகால் எழுத்துலகில் மற்றொருகால் தொடுவானம் முழுதும் அடியளந்தது புகழென்னும் மூன்றாம்கால் இருக்க இடம் தேடியவனுக்கு உலகமே இருக்கையானது சிறுகூடல் பிறப்பு சிறகடித்துப் பறந்து சிகாகோவில் மறைந்தது உலகக் கவிஞனென உறுதிப்படுத்தியது மரணம் உடல் அழிந்த பின்னும் நிலைக்கின்ற நிழலாய் எங்கும் உயிர்சுமந்தலையும் அவன் பாடல்கள் ஒவ்வொரு அடியும் உயிரின் அணுவாய் உணர்ச்சிகள் பொங்கும் உருத்தரும் சதையாய் அனுபவங்கள் வாழ்நாளின் அரவணைப்பாய் உயிர்க்கின்றான் நம்மிடையே நிரந்தரமாய் பொய்யில்லை கவிஞனுக்கு மரணமில்லை - வேல, நெடுஞ்செழியன்
ÁýÁ¢Ä¡ì ¸Å¢»ÛìÌô À¢È󾿡û

º¢Úܼø ÀðÊ¢ý À¢û¨Çî º¢Ïí¸ø
¸Å¢¨¾Â¡ö °ü¦ÈÎò¾Ð
¾Á¢Æý¨É¢ý ¸¡ø¿¨Éò¾Ð
À¡ºõ ¦À¡í¸ «ûÇ¢¦ÂÎò¾¡û
«Åý ¸Å¢»ý ¬É¡ý
«¡¢Â¡ºÉÁ ¦¸¡Îò¾¡û
¸Å¢Âú¡ö ÓÊÝÊÉ¡ý
±ØЧ¸¡ø ¦ºí§¸¡ø ¬ÉÐ
¸ñ½¾¡ºÉ¡öô ¦ÀÂ÷ ÝÊÉ¡ý
¾¢¨º ¡×õ «Ê¨Á¡ÉÐ
®ýÈ ¦À¡Ø¾¢Ûõ ¦À¡¢¾¡ö ¯Åó¾¡û
¾¡¨Â ÅÇ÷ò¾¡ý ¾¡Ûõ ÅÇ÷ó¾¡ý
¾¨ÉÂ¡Ç Â¡ÕÁ¢ýÈ¢¾ ¾É¢Â¡ðº¢ ¦ºö¾¡ý

«Ð ¾¡º÷¸Ç¢ý ¸¡Äõ
À¡Ã¾¢¾¡ºý ÍôÒÃò¾¢É ¾¡ºý
Å¡½¢¾¡ºý ¸õÀ¾¡ºý
«ó¾ Å¡¢¨ºÂ¢ø ¸ñ½¾¡ºÛõ
Óý¦º¡ý§É¡÷ §À¡Ä þÅý ¦À¡öÂʨÁ Âøøý
ÁÐ×ìÌõ ͸ò¾¢üÌõ ¦ÁöÂ¡É ¾¡ºý
«Ê¨Áò ¾¨Ç¸¨Çî º¢È¸¡ö Å¢¡¢ò¾¡ý
ÁÂí¸¨ÅìÌõ §À¡¨¾¸Ç¢ø ãú¸¡Áø Á¢¾ó¾¡ý
¸Å¢¨¾Å¡É¢ø ÀÈó¾¡ý ¯Â÷ó¾¡ý

ÁÐ츢ñ½ò¾¢ø ÅØ츢 Å¢Øó¾¡ý
¸¡ÁìÌÇò¾¢ø ãú¸¢ò ¾¢¨Çò¾¡ý
¯½÷׸û ŢƢò¦¾Øõ §Å¨Ç¸Ç¢ø
»¡Éì ¸¨Ã墀 À¡Åõ ¸¨Ãò¾¡ý
Å¡úžüÌ ÅÆ¢¸¡ðÎõ «Åý¸Å¢¨¾
ܼ¡¾ Å¡ú쨸ìÌî º¡ýÈ¡Ìõ ͺ¡¢¨¾

§º÷òШÅì¸ «Åý ¸ü¸Å¢ø¨Ä
Å¡ðÊŨ¾ò¾ ¦¿Õì¸Ê¸û ¦¸¡ïºÁ¢ø¨Ä
þýÀò¾¢ø ¿£Ã¡ÊÉ¡ý ÐýÀò¾¢ø §À¡Ã¡ÊÉ¡ý
§Á¸õ §À¡Äì ¸Å¢¨¾ ¦À¡Æ¢óÐ ¿¢÷ÁÄÁ¡Ìõ «ÅýÅ¡Éõ
¾¡¸õ ¦ÀÕ¸ô ÀÕ¸¢ò ¾¢¨ÇòÐ §ÁÖõ §¸ðÌõ §º¡¨ÄÅÉõ

¾¢¨ÃÔĸ¢ø ´Õ¸¡ø
±ØòÐĸ¢ø Áü¦È¡Õ¸¡ø
¦¾¡ÎÅ¡Éõ ÓØÐõ «ÊÂÇó¾Ð
Ò¸¦ÆýÛõ ãýÈ¡õ¸¡ø
þÕì¸ þ¼õ §¾ÊÂÅÛìÌ
¯Ä¸§Á þÕ쨸¡ÉÐ

º¢Úܼø À¢ÈôÒ º¢È¸ÊòÐô ÀÈóÐ º¢¸¡§¸¡Å¢ø Á¨Èó¾Ð
¯Ä¸ì ¸Å¢»¦ÉÉ ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÐ Áýõ
¯¼ø «Æ¢ó¾ À¢ýÛõ ¿¢¨Ä츢ýÈ ¿¢ÆÄ¡ö
±íÌõ ¯Â¢÷ÍÁó¾¨ÄÔõ «Åý À¡¼ø¸û
´ù¦Å¡Õ «ÊÔõ ¯Â¢¡¢ý «ÏÅ¡ö
¯½÷¸û ¦À¡íÌõ ¯Õò¾Õõ º¨¾Â¡ö
«ÛÀÅí¸û  Å¡ú¿¡Ç¢ý «ÃŨ½ôÀ¡ö
¯Â¢÷츢ýÈ¡ý ¿õÁ¢¨¼§Â ¿¢Ãó¾ÃÁ¡ö
¦À¡ö¢ø¨Ä ¸Å¢»ÛìÌ ÁýÁ¢ø¨Ä - §ÅÄ, ¦¿Î了ƢÂý



Tuesday, February 5, 2013

Never alone but now (Thanimai)



NEVER ALONE BUT NOW
The crow was never alone,
Especially when he shared his food with his kith and kin,
But due to death, given by the cruel electric post,
That could not be shared,
He has been singled out and is now lying alone.

¾É¢¨Á
ÜÊÔñÏÁ¡õ
¾É¢§Â ¸¢¼ó¾Ð
Á¢ý ¸õÀò¾¢ý ¸£§Æ ¸¡ì¨¸

Text: V. Nedunchezhian
Source: தீப்பெட்டி மனசு - கவிதைத் தொகுப்பு 2005
Translation: P. Inmozhi mangai