Wednesday, April 22, 2020

எங்கள் மனதைத் தருகிறோம் கல்லறையாக டாக்டர் சைமன் அவர்களே!


எங்கள் மனதைத் தருகிறோம் கல்லறையாக டாக்டர் சைமன் அவர்களே!

எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால், நான் பார்த்த டாக்டர்களின் முகங்களில் உங்களைப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் சுரம் என்றால் சுக்கு கசாயம். கம்பளிப் போர்வை. வேர்த்து சுரம் விடும். சளிக்கும் தலைவலிக்கும் வாசலிலேயே மருந்துகள் வளர்ந்திருந்தன. எங்கள் பகுதிக்கு டாக்டர்கள் வந்தார்கள். எங்க அம்மாவின் பாண்ட்ஸ் கம்பெனி வாயிலாக இஎஸ்ஐ மருத்துவமனை நட்பாயிற்று. குழந்தைப் பேற்றுக்கு  ஸ்டேசன் ரோடில் பிரைமரி ஹெல்த் சென்டர் இருந்தது.  வீட்டு அலமாரியில் விக்ஸ், அமிர்தாஞ்சன், நீலகிரி தைலம் மற்றும் அனாசின். அங்கொன்றும் இங்கொன்றுமாக மாலை மருத்துவமனைகள். சுரம் தலைவலி என்றால் ஒரு ரூபாய் டாக்டர்.. ஒரு ஊசி போட்டு டானிக் கொடுத்தால் இரண்டு முதல் ஐந்து ரூபாய். பழைய சோத்துக்கு பதிலாக ஓட்டல் இட்லியும் பன்னும் வட்ட வட்ட பிஸ்கெட்டுகளும். பிறகு நாங்கள் வளர வளர டாக்டரியமும் வளர்ந்தது. நடுத்தர வர்க்கத்தின் எளிய டாக்டராக வாசுதேவன். டாக்டர் லட்சுமணன். அப்புறம் சிடுமூஞ்சி டாக்டர் ஆளவந்தார். அவர் மனைவி டாக்டர் நிர்மலா. அவரவர்களுக்கு ராசியான டாக்டர்களானார்கள். பின்னர் எங்கள் பகுதியில் எங்களுக்கென்று விநோதினி டாக்டர். 
வாசல்களில் மருந்துகள் அகற்றப்பட்டு ரோஜாச் செடிகளும் குரோட்டன்சுகளும் வளரத்தொடங்கின. ரெண்டு ரூபாய் ஐந்தாகி பத்து ரூபாயாக வளர்ந்தது. தடுக்கி விழுந்தால் டாக்டர் வீடு என்றே எங்கள் வளர்ச்சியை வரையறுத்தது நாகரிகம். வீட்டு விசேஷங்களுக்கு பத்திரிகை கொடுத்து அழைக்கும நட்பும் வளர்ந்தது. காலை அரும்பி பகலெல்லாம் போதாகி. மாலை டாக்டரைப் பார்த்தால்தான் முடிவுக்கு வரும் நோய் என்றாயிற்று. ஏற்கெனவே பச்சை மலையில் டிபி ஆஸ்பத்திரி. பிறகு, எம்ஐடி கேட் பக்கத்தில் மெயின்ரோட்டில் அரசு மருத்துவமனை கட்டப்பெற்றது. கூடவே ஊருக்குள் தனியார் மருத்துவமனைகளும். பெரிய அளவில் நோய் என்றால் சென்ட்ரல் பெரியாஸ்பத்திரியும், எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரியும். எம்ப்ளாயி கார்ட் இருந்தால் கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவமனை.
அக்காள் மகன் கணேஷ், பிரைமரி ஹெல்த் சென்டரில்தான் பிறந்தான். குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு நாள்தான். குழந்தை ஆய்போக வில்லையே என்று கவலையோடு அம்மா கேட்டபோதுதான் பார்த்தோம். குழந்தைக்கு ஆசனவாயே இல்லை. அதிர்ந்த எங்களை அரவணைத்தது எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரி. மலக்குடலை இடுப்பில் ஓட்டையிட்டு வைத்தது முதல் அறுவை. மலவாயை முறையாக்க வழி அமைத்தது இரண்டாம் அறுவை. இடுப்பில் இருந்து மலக்குடலை நேர்ப்பாதைக்கு மாற்றியது மூன்றாம் அறுவை. அறுவை வெற்றியாக முடிந்தது என்று தலைமை மருத்துவர் அழைத்துச் சொன்னார். ஒரு உயிரைக் காத்த கடமையின் பூரிப்பு அவர் முகத்தில். அத்தனையும் அந்த சின்ன குழந்தைக்கு இரண்டரை வயதுக்குள். மூன்றாம் அறுவை வெற்றியாக முடிந்து மகிழும் வேளை, பிணமாகத்தான் வீட்டுக்கு வந்தான். மரணத்தின் காரணம் தெரியவில்லை. ஆனால், இரண்டாம் நாளே உயிர்வாழ வழியில்லாதவனை இரண்டரை வயதுவரை போராடி வாழவைத்ததில் வெற்றி பெற்றது மருத்துவம். இப்போது அந்த தலைமை மருத்துவரை நினைத்துப் பார்க்கிறேன்.  அவர் பெயர் தெரியவில்லை. அவர் முகம் கூட நினைவில் இல்லை. ஆனால் அந்த மருத்துவராக நீங்கள் என் கண்ணுக்குத் தெரிகிறீர்கள்.
அக்காள் மகள், ஒன்றரை வயது இன்மொழிமங்கைக்கு டெங்குகாய்ச்சல். கோயம்புத்தூர் மாசானிக் மருத்துவமனையில் சேர்த்தோம். வந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் பிழைக்க முடியாத நிலையிலோ பிணமாகவோ வரிசையாக வெளியேற, அதிசயமாய் இன்மொழி மட்டும் உயிர் பிழைத்தாள். மருத்துவர்களும் செவிலியர்களும் அன்று ஆற்றிய பணிகளை இன்று வரை மறக்க முடியாது. நான் நன்றியோடு ஒரு கவிதை எழுதி மருத்துவமனைக்கு வழங்கினேன். அவள் உயிர்பிழைத்த நிலையில் மனம் நிறைய மகிழ்ந்து  வழியனுப்பிய டாக்டரின் முகத்தை நினைக்கும்போது,  நீங்கள் தெரிகிறீர்கள் சைமன்.
எழில் ஆறுமாத குழந்தை.  ஊருக்குச் சென்று திரும்பினோம். வழியிலேயே குழந்தைக்குக் காய்ச்சல். ஊரெல்லாம் தீபம் ஏற்றி கார்த்திகையைக் கொண்டாடும்போது, எழிலை மடியில் கிடத்திக் கொண்டு செய்வதறியாது திகைத்தோம். உச்ச நிலையில் சுரம். மறுபுறம் பேதியாகிக் கொண்டிருக்கிறது. குழந்தை அழமுடியாமல் துவண்டு கிடக்கிறான். அதிகம் வாங்குபவர் என்றாலும். ஓவர்டோஸ் டாக்டர் என்று விமரிசனங்கள் இருந்தாலும், அன்று எழிலை காப்பாற்றிக் கொடுத்தவர் சன்னதிதெரு பிரபாகரன் டாக்டர். அப்புறம் தொடர்ந்து எழிலும் குழலும் ஆளாகும் வரை அவர்தான் குடும்ப மருத்துவர். இப்போது அவர் தொடர்பில் இல்லை. ஆனாலும் அவரை யோசிக்கும்போது,  என் கண்ணில் அவராக நீங்கள் தெரிகிறீர்கள்.
குழல் பிறந்த போது, அத்தனை பேரின் முகத்திலும் கவலைக்கோடு. ரமா கண்ணீரோடு. முதுகுத்தண்டின் மையத்தில் ஓடும் சீரம் எல்லாம் தண்டுக்கு வெளியே முதுகில் கண்ணாடித் தோலுக்குள் கட்டிபோல ததும்பி நிற்கிறது. பவித்ரா மருத்துவ மனையில் நடைபிணமாய் நின்றோம். உடனடியாக அறுவை செய்தால்தான் குழந்தை பிழைக்க வாய்ப்பு என்று தலைமை மருத்துவர் சொல்ல, கையில் பணமும் இல்லை. பிழைக்குமா என்ற நம்பிக்கையும் இல்லை என பிஞ்சுமுகம் பார்த்து கலங்கி நின்றோம். அறுவை செய்யும் டாக்டர் நிரஞ்சன் என்னை அழைத்து சொன்னார். மூன்று நாளாகிறது. உடனே அறுவை செய்ய வேண்டும். நீங்கள் பணம் கட்ட தாமதமானாலும் பரவாயில்லை. குழந்தையைக் காக்க வேண்டியது என் கடமை. உடனே அறுவை செய்யப் போகிறேன் என்று. அக்காக்களும் அண்ணனும் பங்குபோட்டு பணம் கொடுக்க, குமரேசன் சாரிடம் கடன் வாங்கிக்கொண்டு ஓடினேன். பிஞ்சு ஒடம்பு. நரம்புகள் இப்போதுதான் உருவாகி வளரும். அறுவையில் ஏதேனும் நரம்பு அறுபடலாம். குழந்தைக்கு கால் நடக்க வராமல் போகலாம் என்று சொல்லி அறுவையைத் தொடங்கினார். நல்ல வேளை நரம்பு ஏதும் அறுபடவில்லை என்று அறுவை முடிந்தவுடன் அகம் மலர்ந்து சொன்னார்,  ஆனாலும் குழந்தை புரண்டு படுப்பானா, நகர்வானா, எல்லோரையும் போல் நடப்பானா என்று பருவந்தோறும் மனதில் அச்சத்தோடே காலம்  நகர்ந்தது. இப்போது அவன் கட்டிளங்காளையாக நடைபோடும்போது  டாக்டர் நிரஞ்சன் முகத்தைத் தேடுகிறேன். அந்த முகமாக நீங்கள் தெரிகிறீர்கள். எங்கள் அம்மாவிற்கு மட்டும் எப்போதும் ஓமியோ டாக்டர் செல்வசேகரன்தான். எங்கள் அப்பா ஆஸ்த்துமாவில் தவிக்கும்போதெல்லாம் கைகொடுத்தவர் டாக்டர் இளங்கோதான். தமிழ்மருத்துவம் குறித்த ஆய்வுக் காலத்தில் எனக்கு ஆயுர்வேத டாக்டர் செல்வரங்கமும், திருவண்ணாமலை வாழ்க்கையில் ஓமியோ மருத்துவர் செல்வ சேகரனும், சர்க்கரை நோய்க்கு டாக்டர் தேவானந்தும், தவிர்க்க முடியாத உடனடி தேவைகளில் அவ்வப்போது பைபாஸ் ரோடு சந்தோஷ் கிளினிக் இராஜேந்திரனும், தோள்பட்டை வலியில் இயங்கமுடியாமல் தவித்தபோது வர்மானிய ஆசான் அர்ஜுனனும் என் மெய் காப்பாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலே மூன்று மாதங்களுக்கு முன்பு என் அண்ணன் 90 விழுக்காட்டுக்கும் மேலே இதயத்தில் அடைப்புக்கு ஆளான போது, நம்பிக்கையோடு அறுவை செய்து அவனை நலமாக்கி ஒப்படைத்தவர் பில்ரோத் டாக்டர் அருண். அவர்கள் முகங்களும் உங்கள் முகமும் ஒன்றுதான். வாழ்வதற்கு நம்பிக்கை அளிக்கும் முகம்.  உங்கள் மருத்துவமனை பெயர்கூட புதியநம்பிக்கை (New Hope)தானே.
பணம் கொடுத்தால்தான் மருத்துவமனையிலும் குழந்தையைப் பெறமுடியும், பணம் இருந்தால்தான் இடுகாட்டிலும் பிணத்தைப் புதைக்கவோ எரிக்கவோ முடியும்.  இடைப்பட்ட வாழ்க்கையில் நோய்களிலிருந்து மீள பணமிருந்தால்தான் மருத்துவம் கிடைக்கும் என்பது நடுத்தர வர்க்கம் ஏற்றுக்கொண்ட நம்பிக்கை. எனவே, பணத்திற்காகவே அடுக்கு மாளிகை மருத்துவமனைகள். மருத்துவ மனைகளுக்காகவே புதுப்புது நோய்கள். நோய்களுக்காகவே உழைப்பும் வருமானமும். மருந்துப்பொருள் உற்பத்தியை நம்பியே உலகநாடுகள் என்று ஆகிவிட்ட கார்ப்பரேட் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம்.  அலோபதி மருத்துவம் மீதும் மருத்துவர்கள் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன. மாற்று மருத்துவத்தின் தேவையை இப்போது உலக நாடுகள் உணரத் தலைப்படுகின்றன. அதற்காக, மருத்துவர்களின் பணியை அதற்கான வெறும் வியாபாரமாகக் கருதிவிட முடியுமா?  முழுமையாக அலோபதி மருத்துவத்தை விலக்கிவிட முடியுமா? காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நோயருக்கும் மருந்தெழுதித் தந்து, மேசை இழுப்பறையைத் திறந்துதிறந்து மூடும் டாக்டர்கள் பணத்திற்காக மட்டுந்தான் அந்தப் பணியைச் செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா?  மருத்துவர் ஒரு நாள் விடுமுறை என்றாலும் ஒருயுகம் போல தவிக்கும் நோயர்கள் எத்தனைபேர்? வலியோடு வந்து சிரித்துப் போகும் குழந்தை முதல், அன்றாட வாடிக்கையாளர்களாகிவிடும் முதியோர் வரை நோயர்கள் நேயர்களாகி மருத்துவர்களுடன் நட்பாடல் நிகழ்த்துவது பொய்யா? அவர்களின் பணியிலும், அவர்களுடனான நட்பிலும் வேராக நிற்பது அவர்களின்  தொழில்மீதான அக்கறையும் கடமையும் நம்முடைய நம்பிக்கையும்தானே. நோயோடு ஒருபொழுது உறங்கமுடியாத நாம்,  மாலை முதல் இரவு வரை பற்பல நோய்களையும் காயங்களையும், அறுவைகளையும்  பார்த்துவிட்டு எப்படி அவர்களால் இரவு உண்ணமுடிகிறது, மனைவியோடு எப்படி உறங்க முடிகிறது என்று என்றேனும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அப்படித்தானே இதோ டாக்டர் சைமன் அவர்களும்.
அலைவுறு வாழ்க்கையில் மனிதனைப் பார்த்துக் கலங்கித்தானே கணியன் பாடினான்யாதும் ஊரே யாவரும் கேளிர்என்று. இன்று இடுகாடு இடுகாடாக அவருடைய பிணத்திற்கு அலைவுறு வாழ்க்கையைத் தந்திருக்கிறோமே. மனம் உறுத்தவில்லையா? அந்த அலைவுறு கணத்தில்,  ஒரு மருத்துவர் மட்டும் மரணிக்கவில்லை, அவரோடு, கணியன் பூங்குன்றனையும் சேர்த்தே சாகடித்து விட்டோம். எப்படியோ, வேளங்காடு இடுகாட்டில் ஒருவழியாக டாக்டர் பிரதீப்  மற்றும் ஒரிருவர் உடன்நின்று அடக்கம் முடிந்துவிட்டது.
எந்த நோய் நம்மைத் தொற்றக்கூடாது என்று நாம் கவலைப்படுகிறோமோ, அவர்களும் அதே போல் கவலைப்பட்டு, நோய் தொற்றுக்கு ஆளானவர்களைக் கவனிக்காமல் புறக்கணித்திருந்தால் அவர்களுக்கு அந்த நோய் தொற்றியிருக்காது அல்லவா. அப்படி நினைப்பதில்லையே அவர்கள். நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காக்க மருத்துவம் செய்யும்போது, தம்மைக் காத்துகொள்ளவும் அதே மருத்துவம்தான் என்பது தெரிந்துதானே மருத்துவம் செய்கிறார்கள். மருந்தில்லாத நோய் என்று தெரிந்தும் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்களே. அவர்களுக்கு நோய் தொற்றி மரணம் நேர்ந்தால் அந்த தியாகத்திற்கு நாம் தரும் சன்மானம் கட்டையடியும் கல்லடிதானா.
டாக்டர் சைமன் அவர்களே, அவர்கள் தாங்கள் செய்யும் பாவம் இன்னதென அறியார்கள். அவர்களை மன்னியும் என்றுதான் உங்கள் உடல்முன்னே மண்டியிடத் தோன்றுகிறது. எப்படியோ, நோயில் மரணித்த உங்களை, தங்கள் செயலால் எங்கள் மனங்களில் வாழச் செய்துவிட்டார்கள். உடலைப் புதைத்துவிட்டால் என்ன, உங்களுக்கு மரணமில்லை டாக்டர் சைமன் ஹெர்குலஸ் அவர்களே. நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்று நம்பினால் எங்கள் மனம் உங்கள் கல்லறை. நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால் எங்கள் மனம் உங்கள் வாழ்வறை. வீரவணக்கம்.                                      வேல. நெடுஞ்செழியன்







Saturday, January 17, 2015

சித்த நெறியும் பூண்டிச்சித்தர் வாழ்வியல் குறித்த நூலும்

vOj;jhsu; mDntz;zpyh vOjpa G+z;br; rpj;ju; E}Yf;fhd mzpe;Jiu
cyfk; fhl;rpf;Fk; fUj;Jf;Fk; ,ilNa Kuz;fisf; nfhz;lhLk; tpe;ijf;fsk;.  kdpjg; khz;Gfs; midj;Jk; gz;Gfshf xU kdpjdplk; ,Ue;jhy;> ,e;jf; fhyj;jpy; ,g;gbah vd tpag;Nghk;;@ fhyj;NjhL nghUe;jhjtd;/ள் vdg; gupfrpg;Nghk;. tpag;ghu;e;j Mw;wy;fs; xUtuplk; ,Ue;jhy; mtiu tpae;J Nghw;Wtjw;F khwhக; me;j Mw;wiy vg;gbahtJ ehk; gad;gLj;jpf; nfhs;sNtz;Lk;  vd;W KidNthk;.
Mapuk; rq;FfspilNa xU tyk;Gup ,Uf;Fk; vd;gJNghy nghUs;fUjpa tho;f;ifia epide;J jk;ikj; njhiyj;Jtpl;Lj; NjLk; kdpju;fs; eLNt> mUNs tho;tpd; MjhuKk; NjitAk; jPu;Tk; vd;gij mwptpg;gjw;fhfNt cyf ,af;fj;jpd; El;gj;ijAk; kdpjDf;Fs; Gije;jpUf;Fk; Gjpu;kpf;f Mw;wy;fisAk; czu;e;Jk; Kad;Wngw;Wk; ntspg;gLfpwhu;fs; rpyu;. mtu;fs; ,k;kz;zpy; ,ay;ghd kdpjdhy; epfo;j;j Kbahj gy nray;fisf; fz;nzjpupy; epfo;j;jpf;fhl;b  mj;jifa mUspay; tho;f;ifia mtu;fSf;Fk; trkhf;fpj; jUjy; nghUl;Lr; rf khe;jiu Nehf;fp miog;G tpLf;fpd;wdu;.  ,jd; fhuzkhfNt rf kdpju;f;fha;r; rpe;jpj;J rfkdpju;f;fhfNt jkJ msg;gupa Mw;wy;fisAk; kjpg;G kpf;f tho;f;ifiaAk;  xg;gspj;J tho;gtu;fs; kfj;Jt kdpj;u;fshf - kfhd;fshf milahsg;gLj;jg; ngWthu;fs;.
 rf kdpjupilNa mt;tilahsk; mtu;jk; Mw;wy;fSf;fhd Ntiuj; Njlhky;> mtw;wpd; topahfj; jd;Dila ,d;gj;jpw;fhd NjitfisAk; Jd;gq;;fSf;fhd jPu;TfisAk; ngWtjw;fhd mwptpg;ghfNt mikAk;. ,iwia ehb Ntz;baijg; ngWtij tpl ,tu;fis ehb Nfl;gijg; ngWtJ vspJ vd;W XLfpd;wdu;.  rpiyahfNth fUj;jpayhfNth  tpsq;Fk; ,iwia tpl> capu;g;nghUshfTk; fhl;rpepfo;thfTk; tpsq;Fk; ,k;kfj;Jt kdpju;fNs NeubNa Ntz;baijf; Nfl;Lg;ngWtjw;Fk; nfhLj;jhfNtz;ba epu;g;ge;jj;jpw;Fk; Ml;gl;ltu;fs;. nfhLj;jhy;jhNd nja;tk;. xUCUy xU uh[h vd vl;lhf; fdT tho;f;if Fwpj;j fijfisAk;> Njtijfs; te;J mUs;tJk; my;yJ Gijay; fpilj;J kfpo;tJkhd - elg;igAk; ciog;igAk; kWj;j - fijfs; topNa fhyq;fhykhf tsu;j;njLf;fg;ngw;w r%fk; ,g;gbj;jhd; rpe;jpf;Fk;. ,J nghUs; gilj;j my;yJ  nghUs;fUjpa tho;f;ifapd; epiy.
kw;nwhU tho;f;if cz;L. mJ ciog;gpy; kl;LNk ek;gpf;if itj;Jf; fpilg;gijf; nfhz;L tho;tJ: fpilf;ftpy;iyahapd; tpjpia nehe;J Vw;Wf;nfhs;tJ vd;wpUf;Fk; ghku tho;f;if. ,q;Fg; ngupa mstpy; vjpu;g;ghu;g;G VJk; ,Uf;fhJ. Mw;wy;kpf;f kfj;Jt kdpju;fis tpae;jhYk; mt;thw;wiyg; gad;nfhsf; fUjhj my;yJ mbg;gilj; Njitfisf; fle;J gad;nfhs;s epidf;fhj ,ay;gpdu; ,g;ghkuu;fs;. vdNt kfj;Jtk; kpf;f kdpju;fs; ngUk;ghYk; ,j;jifa ghku kf;fspilNajhd; jq;fs; tho;f;iff;fsj;ij mikj;Jf;nfhs;fpd;wdu;. Mdhy; ciliktu;f;fj;jpdu; ,tu;fisj; Njb milahsq; fz;L gad;nfhs;sj; Jbf;fpd;wdu;. jkJ trjpf;Nfw;w mtiu tisj;J ,ay;ghd rKjha tho;tpypUe;J NtWgpupj;Jg; nghUs;Kjy; tho;f;ifapd; ikaj;jpy; ,Uj;Jfpd;wdu;. ,jd; tpisthf mj;jifa kfj;Jt kdpju;fs; rypg;Gw;Wf; filtpupj;Njd; nfhs;thupy;iy vd mwptpj;J jkJ fhl;rpepiy tho;f;ifapypUe;J jk;ik tpLtpj;Jf;nfhs;fpd;wdu;. mtu;fs; clyhy; fz;nzjpupy; ,we;J Gijf;fg;gl;lhYk; mtu;fs; ,wthJ ,d;Dk; ,aq;FtjhfNt ek;Gfpd;wJ khDlk;. mjhtJ fUj;Jepiyapy; mtu;jk; ,af;fk; kuzkpyhg; ngUtho;thfj;  njhlUk; vd;gJ ek;gpf;if. 
kdpjd;> epw;gd elg;gd gwg;gd Cu;td Mfpa capupdq;fspd; gupzhk tsu;r;rpapy; $Ljyhfg; gFj;jwpAk; rpe;jidiag; ngw;w fhuzj;jhy; ehs;NjhWk; Nkk;gl;Lj; jd; ,dj;ijAk; jhd; cUthf;fpa rKjhaj;ijAk; GJikAw topelj;Jk; kw;WnkhU capupdk;. gpwe;jjw;fhfNt tho;td gpw. kdpj ,dk; kl;LNk tho;tjw;fhfNt gpwf;fpd;wJ. kd; vd;why; epiyNgW. gpwg;Gf;Fk; ,wg;Gf;Fk; ,ilNa mike;j Fwpg;gpl;l fhy tho;it ,wg;Gf;Fg;gpd;Dk; kjpg;Gkpf;fjhf epiyg;gLj;Jk; Mw;wiyg; gFj;jwptpdhy; ngw;w fhuzj;jhNyNa epiyahdtu;; vd;w nghUspy; kdpjd; vDk; ngau; toq;FfpwJ. Mdhy; kdpj cUtpy; gpwf;fpd;w midtUf;FNk ,t;tiuaiw nghUe;Jkh vd;gJ Nfs;tp.
cyfk; Njhd;wpa ehs; njupahJ ,aq;fpf;nfhz;Nl ,Uf;fpwJ. ,jid kd;dh cyfk; vd;fpNwhk;;. Mdhy; gpwg;Gk; ,wg;Gk; Fwpg;gpl;l fhy ,ilntspf;Fs;s mike;j kdpj tho;f;if kd;Djy; nghUe;jpaJ vd;fpNwhk;. ,jid cw;W Nehf;fpdhy;> kuzk; tiu tho;jy; kdpjDf;fhd fhy tiuaiw. mt;thW thOk; tho;f;ifiag; gFj;jwptpdhy;  Ma;e;J nghUSila tho;thf mikj;Jf;nfhs;s Ntz;Lk; vd;gJ Fwpf;Nfhs;.  Mapd; ,q;Fg; nghUs; vdf;Fwpg;gijf; ifg;nghUshff; nfhs;tjh nka;g;nghUshff; nfhs;tjh vd KbntLg;gjpNyNa kdpju;fs; jk;Ks; NtWgLfpd;wdu;. ifg;nghUisf; fUJgtu;fs; XbXbj; Njbj;Njb ,Wjptiu epiyahj clYf;fhfNt tho;e;J mjdhy; Vw;gLk; cwT gif Ja;g;G tpisT ,d;gk; Jd;gk; Mfpatw;wpy; coe;J mtw;WlNdNa Nghuhbj; jhk; tho;e;jjw;fhd milahskpd;wp epiyahJ  kiwe;JNghfpd;wdu;. ,tu;fSf;Fk; tpyq;FfSf;Fk; gpwg;gpYk; ,wg;gpYk; kl;Lkd;W: tho;f;ifapYk; $l NtWghL ,y;iy. khwhf> tho;f;ifiag; nghUSilajhf thoNtz;Lkhapd;> ifg;nghUisf; fUJtij tpLj;Jg; nka;g;nghUisj; Njb miyfpd;wdu;.
jd;idf; fUjhj tho;Nt nka;;;;;g;nghUspd; Kjy;gb. ,j;Njliy milAk;tiu cly; Ntz;Lk;. mt;thwhapd; Gyd;fspd; Mirf;F ,lk;juhJ ,Ug;Gf;fhf kl;LNk cliyg;Nghw;wpg; nghJeyk; fUjpajhf tho;f;ifia mikj;Jf;nfhs;tJ ,uz;lhk;gb. ,tu;fisg; nghWj;jtiu ,iw Md;kh ,tw;wpnyy;yhk; fUj;ijr; nrYj;jhJ ,t;Tyfk; nka;;@ tho;f;if nka;: ,t;tho;f;if vy;NyhUf;FkhdjhfNt mika Ntz;Lk; vd;gJ nka;@ Mdhy; xUrpyUf;Nf vy;yhKk; nrd;W Nru gyu; VJk; fpilf;fhky; thLfpd;w fhl;rpAk;; nka;@ ,t;Ntw;wj;jho;it khw;wpr; rkj;Jt cyif khDl rkj;Jtj;ij vy;NyhUf;Fk; vy;yhKk;  vd;w epiyia cUthf;Fjw;fhf - ,jid czuhj rfkdpjUf;fhfr; rpe;jpf;fTk; NghuhlTk; jd; tho;f;ifia xg;gspg;gJ vd;w Fwpf;Nfhspy; tho;tJNt gads;s tho;T vd czu;e;J tho;tJ. ,tu;fspd; tho;f;ifAk; kuzKk; nghUSilajhfTk; kjpg;Gkpf;fjhfTk; mikAk;. ,tu;fNs tuyhw;W khe;juhf cau;fpd;wdu;.  
,tw;Wf;F Nkyhf> ,t;tho;f;ifapy; clNyhL $bapUe;jhYk; cly;NtW capu;NtW vd czu;e;J cly; rhu;GilaJ capu; rhu;gpyhj jd;dpiy cilaJ. epiyahd capu; epiyaw;w cliyr; rhu;tjpdhNyNa kuzk; epfo;fpwJ. cly;jhd; kupf;fpwNj jtpu capu; kupg;gjhf czu;tjpy;iy. mg;gbahapd; ehk; clYf;fhf tho;tjh capUf;fhf tho;tjh vd;w tpdhit vOg;gpf;nfhz;L tho;f;ifia Nehf;fpdhy; clYf;fhd tho;f;ifapd; czTk; Ja;g;Gk; NtW: capUf;fhd tho;f;ifapd; czTk; Ja;g;Gk; NtW vdf; fz;Lzu;tJ %d;whk; gbepiyapd; Fwpf;Nfhs;.
vq;Fk; epiwe;j fhw;W ntspia ,lkhff;nfhz;lJ. vdNt cly;$Lk; capUf;fhd ntspNa.  vdNt cliy ntspapd; $iuahf czu;e;jhy; mt;Tlypd; ,af;fKk; NjitAk; capu;f;fhw;wpd; ,Ug;Gf;fhd NjitNa vd;gij czutpaYk;. mt;thwhapd; Njhw;wKk; mwpahj xLf;fKk; mwpahj   gpugQ;rj;jpd; epiyNgw;Wf;fhd fhuzq;fis Muha;e;J Nfhl;ghL tFj;J mf;Nfhl;ghl;ilg; gpd;gw;wp tho;e;jhy;  clypd; mikg;Gk; ,af;fKk; mg;gpugQ;r ,af;fj;jpd; njhlu;r;rpNa vd;gJ czug;ngWk;. mt;tifapy; clYf;fhd czitj; jirfis tsu;g;gjw;fhd czthfj; NjLtij tpLj;J ntspaplj;J capu; epiyg;gjw;fhd %r;rpid ,af;Fk; czNt Njit vdj;Njbdhy; fhw;Nw czT vd;w tpil fpilf;Fk;. mjw;Nfw;g tho;f;ifiaf; fz;lile;J mjd;top mOFk; nghUis mOfhjthW cs;sPuk; tw;wr; nra;J gf;Ftg;gLj;Jtjd; %yk;  neLehs; epiyg;gijg;Nghy; czTf;Fk; fopTf;Fkhd nfhs;splkhf mike;J mOFk;  cliy fhw;wpd; igahf czu;e;J fhw;iwNa cz;L %r;ir Mz;L  czTk; fopTkw;W mOfhtz;zk; ,Wf;fp clypd; ,af;fj;ijj; jd;tag;gLj;jp capupd; ,af;fj;ij epiyg;gLj;jtpaYk;. mjd;top> kuzj;ij ntd;W thOk; tifiaf; fz;liltJ %d;whk; gb.
Kjy; gbf;Fk; ,uz;lhk; gbf;Fk; Ntwhdjhf ,J milahsg;gLk;> Mdhy; cw;W Nehf;f ,J mt;tpuz;L gbepiyfisAk; cl;nfhz;lJ. coYk; tho;tpypUe;J epiyNgw;iwj; NjLk; Nfs;tpfSf;F cliyf;flthj epiyapypUe;Nj KjypU gbfSk; tpilfhzKw;gl;L mbKb NjLtJ Nghd;w Kbtpyhg; gazj;jpNyNa Rw;wpr; Roy;tjhff; nfhs;tu;. Mdhy; %d;whk; gbNah capiu czu;e;J cliy Ms;tjd;top cly;fle;j epiyapy; jd;id ,of;fhJ czu;e;J ngw;w jd; capupd; epiyNgw;iwf; fz;lila vOg;gpa Nfs;tpfisAk; - Nahfg;gapw;rpAk; rpe;jid Kaw;rpAk; ,izaj; jhk; fz;lile;j  mf;Nfs;tpfSf;fhd tpiliaAk; - cyFf;F czu;j;j tpiotJ ,k;%d;whk; gbapd; Fwpf;Nfhs; MFk;. cliyf;flthJ clypypUe;J tho;tNj tho;T vdf;fUJk; KjypU gbepiyfspypUe;J %d;whk; epiyiag; ghu;f;Fk;NghJ Vl;Lr;Riuf;fha; Nghyg; nghUe;jhjJ Nghd;Nw Njhd;Wk;. Mdhy; fhw;iw cz;L thOk; tho;f;if -  cliy MW Mjhuhq;fshff; fz;L capu;Mw;wiy moptjw;Fupa fPo;epiyapypUe;J mopahepiy Nehf;fp NknyOg;gpf; nfhzUk; Nahfepiy rhu;e;j tho;f;if midtUf;Fk; rhu;j;jpaNk vd;gijj; jkJ tho;f;if top czu;j;Jk; kdpju;fs; kfj;Jtk; kpf;f kdpju;fshfpd;wdu;.
fhl;rp;epiyapypUe;J NtWgl;l fUj;jpay; epiyf;F czu;it Kd;dpWj;jp kf;fis miof;Fk; gj;jpepiyf;F khwhf> fUj;jpayhff; fUJk; tho;f;if rhj;jpag;gl;l nka;tho;f;ifNa vd;gijf; fhl;rpepiyapy; - fUj;jpayhf ehk; fUJtJk; fhl;rpepiyNa vd;gij czu;j;Jk; tifapNyNa ,r;rpj;jpepiy tho;f;if jpfo;fpwJ. ,jidg; Gupahj epiyapNyNa> jk; mwpTf;Fk; vjpu;ghu;g;Gf;Fk; rpf;fhj jk; tho;it ,iwahw;wy; ,af;Ftjhf KbTnra;J kaq;fpf; fplf;Fk; kdpju;> jk; tho;f;ifia capupd; mfg;gLj;jyhf czu;e;J rpf;nfdg;gpbj;Jf; ifg;gw;wpapUf;Fk; ,k;kfj;Jt tho;f;ifiag; Gupe;Jnfhs;s Kaw;rpf;fhky; rpj;jd;Nghf;F rptd;Nghf;F vd;Wk; rpj;jd;epiy gpj;jd;epiy vd;Wk; gpjw;Wfpd;wdu;. mwpjypd; njhlf;fepiyapy; cs;s Foe;ijf;Fk;  fhuzfhupa mbg;gilapyhd mwpjiyg; ngw;wpUf;Fk; ngupNahUf;Fkhd ciuahlypy; cs;s Gupjy; ,ilntspiag; Nghd;wNj ,k;%d;whk; gbepiyf;Fk; KjypU gbepiyfSf;Fk; cs;s ,ilntsp.
jdf;fhd Njitfisg; Gwj;Nj NjLk; kdpjUf;F tpag;ghfj; Njhd;Wk; gy Mw;wy;fis epfo;j;jpf; fhl;Ltjd; top kf;fshy; jkJ Njitf;fhf tzq;fg;ngWk; ,k;kfj;Jt kdpju;fs; fhye;NjhWk; Njhd;wp tpsq;Fk; kz;zhfj; jpUtz;zhkiy fUjg;gLfpwJ. ,k;kz;zpy; ,j;jifa mupa Mw;wy;fNshL md;whlj; Jd;gq;fspy; jpifj;Jg; gijf;Fk; kdpju;fspd; mwpahikf;F ,uf;fg;gl;L> Vw;Gila Njitfs; epiwNtwTk; Vw;Gila jPu;Tfis vl;lTk; topfhl;Lk; gzpia ,tu;fs; nra;tjd; top ,iwikf;F ,izahf my;yJ thOk; ,iwikahfg; Nghw;wg;ngWfpd;wdu;.
rpj;ju;fs; vdg;ngWk; ,k;kfj;Jt kdpju;fspd; tupirapy; %d;W kfj;Jt kdpju;fisj; jk; tho;tpy; fz;lile;j jkJ gazj;jpy; mtUs; Kjyhktuhfj; jk; ,stajpNyNa mwpKfkhd G+z;br; rpj;jupd; tho;f;ifntspiaj; jd;dhy; ,ad;wtiu Kad;W tiue;Jfhl;Lk; Kaw;rpapy; jpUkpF. mZntz;zpyh mtu;fs; E}yhf cUthf;fpAs;shu;. Vw;nfdNt xUKiw ntspapl;Ls;s E}iyj; njhlf;f Kaw;rpahff; nfhz;L> njhlu;e;j Njlypy; fpilj;j Gjpa jfty;fNshL NkYk; GJikg;gLj;jpAs;shu;. vq;Fk; gue;jpaq;FtJ rpj;ju; tho;tpayhapd;> mtu;fis ehk; Njbr; nry;y Ntz;bajpy;iy@ mtu;fNs ek;ikj; Njb tUtu;. ekJ md;G nka;ahdnjdpy; mtu;fs; jk;gzpf;F ek;ikf; fUtpahf;fpf; nfhs;tu; vd;w Nfhl;ghl;ilj; jkJ Xa;Tf;fhy tho;tpaf;fkhff; nfhz;L mjd;gbNa Nahfpuhk; #uj;Fkhiu FUthff; nfhz;L mr;rpe;jid epoypy; jkf;fhd ,Ug;ig Vw;gLj;jpf;nfhz;Ls;shu;.
Nr\hj;jpup> Nahfpuhk;#uj;Fkhu;> G+z;br; rpj;ju; vd;w %d;W Gs;spfis ,izj;J cUthd Kf;Nfhzj;Jf;Fs; ghJfhg;ghd tho;f;ifia mikj;Jf;nfhz;Ls;shu;. ahd; vdJ vd;w Njitfis tpLj;Jj; jd;idf; fUtpahfNt czu;e;j fhuzj;jpdhy; jdf;fhd Njliy tpLj;J kfj;Jtq;fspd; fhuzfhupaq;fs; Fwpj;j Kbahj; Njlypd; gaztopf; Fwpg;Gfshf ,tu;jk; Md;kpfg; gilg;Gfs; jpfo;fpd;wd. je;ijjha; ,y;yhj tho;f;ifia epidf;fKbahj rpWFoe;ij> jd; rhu;ig czuhky;> je;ijAk; jhAk; jd;idj; NjbtuNtz;Lk;: jd;idkl;LNk rpe;jpf;fNtz;Lk; vd;W gpbthjk; gpbf;Fk; kdepiyapypUe;J ,tu; vOJk; vOj;Jf;fs; Foe;ij kdepiyNahL czu;e;J Ritg;gjw;F cupad.
G+z;br;rpj;jupd; gupT je;ijik nefpo;it Vw;gLj;Jtd. jd;Dila ,t;tho;Nt Kad;W ngw;wnjd;gijg;; G+z;br;rpj;jupd; thf;fhfNt ,e;E}y; Fwp;g;gpLtJ Muhaj;jf;fJ. mt;thNw filtpupj;Njd; nfhs;thupy;iy vd;w  ntspg;ghL ts;syhNuhL xg;gpl;L Nehf;Ftjw;F cupaJ. thrpNahfKk; `lNahfKk; Nahfg;gapw;rpapd; epiyfSs; mlq;Ftd. tUtJ czu;e;J $Wk; Mw;wiyf; fzpnad ciuj;jy; jkpo; kuG> clNyhL $ba epiyapNyNa ntt;NtW ,lq;fspy; fhl;rpaspj;jy; vd;gJ khDlg; ghu;itapy; GjpuhdhYk; #f;Fkclypaf;fkhf milahsg;gLj;jy; rpj;ju; kuG. Gwntspapy; capiug; nghUj;jp mfntspapy; Njly; epfo;j;jpg; ngWk; jk; fUj;Jfis mtu;fspd; nkhopapy; czu;j;j - ,ay;G khe;ju;f;F czutppayhj Gupjy;rhu;,ilntspiag; gupghi\ vd;gJ nkhopkuG. vdpDk; fhl;rpastpy; epfo;e;jit ghukupd; tha;nkhopg; gjpTfshfpf; fsMa;thsupd; Njly;gjpTfsha; ehl;Lg;Gwtpay; Ma;NthL  nghUe;jp epw;Fk;  rpj;ju; tho;tpaypy; ,g;gjpT Fwpg;gplj;jf;fjhfj; jpfo;fpwJ. ek;GtJ fbdk; Mdhy; ed;whfj;jhNd ,Uf;fpwJ vd;gJ ghkuu; ghu;it. ,iwepiyia Vw;Wf;nfhz;lhy; vy;yhNk rhj;jpak; vd;gJ Md;kPfg; ghu;it. fhupaq;fs; fhl;rpasitaha; mika fhuzk; Njb miyfpwJ mwpTg;ghu;it. Mwpthy; mwpaKbahj NghJ czu;thy; ghyk; mikj;J kfpo;fpwJ Mrpupaupd; ghu;it.

Kidtu; Nt. neLQ;nropad;> ,izg;Nguhrpupau; jkpo;j;Jiw muR fiyf;fy;Y}up jpUtz;zhkiy 606 603. velanedunchezhian@gmail.com

Saturday, November 29, 2014

எதுக்குச் சொல்றேன்னா



எதுக்குச் சொல்றேன்னா…
நேற்று என்னுடைய மாணவநண்பருடைய புதுவீட்டிற்குச் செல்வதற்கு ஏறக்குறைய நான்கைந்து மாதம் கழித்து வாய்ப்பு அமைந்ததால் புத்தகப் பரிசோடு செல்ல முடிவுசெய்தேன். மூத்த மாணவநண்பர் சங்கர் என்னை அழைத்துச் சென்றார். வம்சிக்குச் சென்றோம். அவருஇவரு என்பது செயற்கையாக இருக்கிறது. ஏனென்றால் சங்கரும் பிரவும் என் செல்லப்பிள்ளைகள். ஆனாலும் ஒருவேளை வருத்தப்பட்டால்… அதனால் ர் போட்டே எழுதுகிறேன்.
நான் கவிதை, புதிய புனைகதைகள் ஏதேனும் எனத் தேடினேன். சங்கர் நீங்கள் வாங்குவதை வீட்டிலுள்ள மகளிர் உறுப்பினரும் படிக்க வேண்டுமெனில் உங்கள் கோணத்தில் வாங்காமல் விஜய்தொலைக்காட்சி கோபியின் எழுத்து போல வாங்குங்கள் என்று ஒரு புத்தகத்தைக் காட்டினார். அவன் கருத்து என்கையைச் சற்றே பின்னுக்கு இழுத்து கால்களை உள்ளறைக்கு நகர்த்தியது. சற்றே தேடும்போது நான் நேசிக்கும் அண்ணன் ச. தமிழ்ச்செல்வனின் என் சக பயணிகள் என் கையை விட்டு இறங்க மறுத்தது. சரி இதனைப் பிரபுவுக்கு என எடுத்துக்கொண்டேன்.
     அவன் – மன்னிக்கவும் - என்னால ர் போட்டு செயற்கையாக எழுதமுடியவில்லை. அவனுடைய மனைவிக்காக ஒன்று வாங்க எண்ணினேன்.  பிறகு சங்கரிடம் கோபியின் புத்தகத்தைத் தேடுமாறு கேட்க, நீயும் நானும் கைக்கு வந்தது. அப்படியே நோட்டம் விடும்போது என் பணிவாழ்க்கையில் பாலிய நதியின் ஈரக்காற்று சில்லென மோதியது. மேல் அடுக்கில் சார்வாகனின் எதுக்குச் சொல்றேன்னா புத்தகம். மின்கம்பியைத் தொட்ட அதிர்வலை எனக்குள். நான் மெய்ப்புத் திருத்தம் பார்த்த நூல். எனக்கும் க்ரியா மொழிக்குமான பத்துமாத கருவறைத் தொடர்பின் ரகசியமான காதல் சின்னம். முகுந்த் நாகராஜனின் கவிதையில் வருமே சித்தாள் தன்சேலையைக் காயவைத்த செய்தியைத் தன் மகனுக்குச் சொல்லாத கதை போல.
மனம் பின்னோக்கிப் பயணித்தது. ஒருநாள் க்ரியாராம் கூறியதாக பாராசு ஐயா என்னை அழைத்து, அச்சகத்திற்குச் சென்று மெய்ப்புத் திருத்தப் பணி செய்யுமாறு கூறினார். ஏற்கெனவே அவர்கள் பார்த்து முடித்து இறுதிநிலையில்தான் எனக்குப் பணித்தார்கள் என நினைக்கிறேன். க்ரியா ரவிச்சந்திரன் பார்த்திருக்கலாம். அல்லது நாராயணன் ஐயா…. நானும் கோட்டூர்புரம் சென்று செம்மைப்பணியைச் செய்தேன். கையால் அச்சுகோக்கும் காலமது. ஆங்காங்கே புள்ளிகள் அலங்கோலமாக இருந்தன. அவற்றையெல்லாம் நீக்கச்சொல்லிக் கொடுத்துவிட்டு பாராசு ஐயாவிடம் தெரிவித்துவிட்டு நான் என்னுடைய பணியில் மூழ்கிவிட்டேன். அதுவரை க்ரியாராம் என்னிடம் நேரடியாகப் பேசியதில்லை. அன்று என்னை அழைத்துப் பேசினார்கள். இறுதி அச்சுவடிவம் சரியாகப் பார்க்கப்படவில்லை என்பதால் அது திருப்பப்பட்டது. மற்றொன்று என்னுடைய பணிக்கான கூலி எனக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டது. நான் வேலாயுத்தின் மகனாக வெதெ மாணிக்கம் ஐயாவின் மாணவனாக வளர்ந்ததால் பணியை நேசிப்பேனேயொழிய பணத்தைச் சிறிதும் நேசிக்கமாட்டேன் என்பதால், பணியில் பெருங்குறையாக உணர்ந்து மனம் நொறுங்கினேன். என்னுடைய தவறாக ஏற்றுக் கூலிவாங்க மறுத்தேன். என்னுடன் க்ரியாராம் முதன்முதலாகப் பேசிய தருணமது. அவர்களைப் பொறுத்தவரை கொடுத்தே தீருவது என்றும் என்னைப் பொறுத்தவரை வாங்கவே மாட்டேன் என்றும் சில நிமிடங்கள் இறுக்கமாக் கடந்தன. இறுதியாக அவர்களின் நிறுவனமுகத்திற்கு எதிரே என்னால் மறுப்பு எடுபட வாய்ப்பில்லாததால், வாங்கிக்கொண்டேன். அவமானம் என்னுடைய பாலியநதியில் ஏதோ கழிவுநீர் கலந்தது போல உறுத்தியது. ஒரு பணிக்களங்க முத்திரையை என்மீது சுமத்தியதுபோல அந்தக் கூலித்தொகை என்னை வாட்டியது. அவர்கள் அன்பானவர்கள். பணியில் நூறு விழுக்காட்டிற்குமேல் நேர்த்தியை எதிர்பார்ப்பவர்கள். நெய்த ஆடையை முடிக்குந் தறுவாயில் இழையை அறுத்தற்குக் கூலியா என்று மனத்திற்குள் அழுதேன். எனக்கு அப்போதெல்லாம் ஆறுதல் ரெகுநாதன் அண்ணாவும் என் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும்தான். மனம் இறுகிக்கிடந்தால் திருவான்மியூரிலிருந்து கிண்டிவரை நடந்தே வருவேன். இடையில் இளைப்பாற, நிறுவனத்தின் தனிஅலுவலர் மராவின் நேசமிக்க மேசையும்… தோழர் வளர்மதியின் வீடும்... அந்த நடையில் இறுக்கம் தளர்ந்து இயல்புக்கு வருவேன். ஆனால் அன்றைய அந்த நிகழ்வில் ஏற்பட்ட இறுக்கம் கிண்டிவரை நடந்தும் தளரவில்லை. இன்னும்கூடத்  தளரவில்லை என்பதை, இன்று அந்தப் புத்தகத்தின் பிரதியைப் பார்வை தொட்டபோது உணர்ந்தேன். ஆனாலும் கணவன்பேர் இல்லாவிட்டாலும் காதலுக்குப் பிறந்த பிள்ளை மீதான ரகசியநேசமாய் அந்தப் புத்தகத்தைப் பத்துவிரல்களாலும் தழுவினேன். சங்கர் உடன் இல்லையென்றால் நெஞ்சாரத் தழுவி முத்தமிட்டிருப்பேன். இவை அத்தனையும் ஒருவழிப்பாதை போல என் மனத்தின் தடங்கள்தான். க்ரியாராமுவுக்கோ, பாராசு ஐயாவுக்கோ இந்த உணர்வுகள் தெரிய வாய்ப்பில்லை. ஒருவேளை இந்த இடுகையைப் படிக்க நேர்ந்தால் அவர்கள் அப்படியா என்றோ அல்லது அப்படி ஏதும் நிகழவில்லை என்றோகூடக் கூறலாம். இல்லைஇல்லை மொழியலாம்.  
ஆண்டுதோறும் திருவண்ணாமலையிலிருந்து புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுகொண்டிருந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பின் புத்தகக் கண்காட்சியில் க்ரியா அறைக்குள் நுழைந்தபோது க்ரியாராம். வணக்கம் சொன்னேன். வாங்க நெடுஞ்செழியன் என்று அன்போடு புன்னகைத்து அழைத்து உரையாடினார். என்பார்வையில் உறவாடினார். அங்குப் பணியாற்றும்போது இந்த அன்புக்காக நான் ஏங்கியது அவர்களுக்குத் தெரியாது. பனி உறைந்த மலைபோல பணியில் இறுக்கமாக இருந்த பாராசு ஐயாவுக்குள்ளும் க்ரியாராமுக்குள்ளும் இந்த இளநீர்த் தளும்பலை நான் அன்று உணர்ந்திருந்தால் நான் மொழியிலிருந்து வெளியேறியிருக்க மாட்டேன். அன்று க்ரியாவும் பாராசு ஐயாவும் எனக்கு வாசிப்பில் வழங்கிய அந்த கர்ணக்கொடையை மறுக்கமுடியுமா? பணியின் நேர்த்தியைக் கடுமையான முகத்தோடு கற்பித்ததைத்தான் மறக்கத்தான் முடியுமா? யாரேனும் கரும்பு தின்ன…. கூலி கேட்பார்களா என்ன!
சரி, அப்புறம், எங்கள் வீதி வெயிலில் புழுதியாடி மழைநாட்களில் சேறாடிக் கிடக்கும். என்வண்டி அந்தச் சேற்றில் விளையாடிக் களித்த மழைநாட்கள் விலகி ஒருமாதத்திற்குப் பிறகு அதைக் குளிப்பாட்டி மெருகேற்றச்சொல்லி பணக்களத்தில் விட்டுவிட்ட நிலையில்தான் சங்கர் என்னை அழைத்துச்சென்றான். சண்முகா கல்லூரியில் ஒருவாரப் பணி. பிரபு தற்காலிகப் பேராசிரியர் பணியிலிருந்து நிரந்த பள்ளியாசிரியர் பணிக்குச் சென்றுவிட்டான். புதுமனைப் புகுவிழாவன்று நான் வேறொரு பணிநிமித்தம்  மதுரை சென்றுவிட்டேன். அதனால், நேற்று செல்ல முடிவு செய்தபோதுதான் மேற்படி மனவோட்டங்கள். காலையில் கல்லூரிக்கு வந்து விட்டுவிட்டு சங்கர் சென்றுவிட, மாலை பிரபுவின் தம்பி, என் மற்றொரு செல்லப்பிள்ளை சீனு அந்தப் பணியை மேற்கொண்டபோதுதான் பிரபு வீடு செல்ல இந்த வாய்ப்பு. ஆனாலும் ஆறுமணிக்கும் தேர்வுப் பின்னூட்டப்பணி முடியவில்லை. வண்டியை எடுக்க வரச்சொல்லி ஏஎஸ் பணிக்களம் அவசரப் படுத்தியதால் பிரபு வீட்டிற்கு இன்றும் செல்ல முடியவில்லை. சீனு என்னைக் கொண்டுவந்து பணிக்களத்தில் விட்டுச்சென்றான். வழியில் சுழியம்ஏழு துணைஇயக்குநர் சுரேஷ் என்னைச் சந்திக்க அழைத்தும் செல்லமுடியவில்லை. இறுகிய மனத்திற்கு இதமான வார்த்தைகளோடு செல்வன் வீட்டிற்கு வந்திருந்தான். நாளைதான் எப்படியாவது பிரபு வீட்டிற்குப் போய்வர வேண்டும். இதோ என் கையருகே கண்ணைத் தழுவியவாறு  கணினி மேசையில் எதுக்குச் சொல்றேன்னா. என் மொழி வாசத்தை இன்னொருநாள் எழுதுகிறேன். எதுக்குச் சொல்றேன்னா, கீழேயிருந்து ரமாவின் அழைப்பு, இப்போ காப்பி குடிக்க போறேன்.