Saturday, September 11, 2010

சன்னல் வழியே

பார்த்துக்கொண்டே வந்தோம்

வழியெல்லாம் இயற்கையை

நான் ரசிக்க

அவன் கோயிலைத் தேடினான்

ஆளற்ற பெருவெளியில்

சிலையொன்று தென்பட்டது

வேல வில்லா அடையாளம் theriyavillai

கண்ணை மூடினான்

கன்னத்தில் போட்டுக்கொண்டான்

என்ன சிலை என்றேன்

முருகன் என்றான்

வில் மாதிரி தெரிந்ததே என்றேன்

aப்படின்ன ராமனா இருக்கும் என்றான்

வேடியப்பன் பற்றியெல்லாம் அவனுக்கு

தெரிந்திருக்க நியாயம் illai

என் சிரிப்பில் அவன் மதச்சாயம்

வெளுத்ததை அறிந்துகொண்டான்

எனக்கு எல்லாம் ஒன்றுதான் என்றான்

அந்தப் பக்கம் பார்த்தேன்

தேவாலயமும் mஅசூதியும் தெரிந்தன

அவனுக்குத் தெரிந்திருக்குமோ

தெரியவில்லை

பெரியார் சிலை வந்தது

இறங்கிக் கொண்டேன்

கையசைத்தேன் கவனிக்க வில்லை

அவன் கண்கள்

கோயிலைத் தேடி..

ஒற்றை பனித்துளிக்குள்

உலகம்

அடங்கியது

சூரிய thaagam

பிரமாஸ் ஏவுகணை வெற்றிகரமாய்

விண்ணில் பாய்ந்ததாம்

பூமிப்பந்தையொத்த நெருப்புக்கோளம்

ஏவுகணையின் கீழ்..

படம் பார்த்துக் குழல் சொன்னான்

அய்யய்யோ அப்பா

ராக்கெட் வெடிச்சிடிச்சி

அவன் புரிதலில்...

நமக்குத்தான் புரியவில்லை

அந்த வெடிப்பு பூமிக்கானதென!

இருட்டுப் பானையில்
கல்லெறிந்தது யார்?
உடைப்பெடுத்துப் பாயும் olli
திசையெல்லாம் கரைபுரளும்
சுகமாய் நீந்திக் களி
காட்டாற்று வெள்ளமது
காணாமல் போகுமுன்
karai சேர் பததிரமாய்
மறு பானைக்காய்
மண் திரட்டுகிறான்
kuyavan

Friday, September 3, 2010

மரணக் கணக்கு

பிணங்களின் பார்வையில்
மரணங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன
எனக்குத் தெரிந்து எந்தப் பிணமும்
எதிர்வினை புரிந்ததில்லை
சத்தியாகிரகப் பாணியில்
அழுகி நாறுவதைத் தவிர.